சமூக விலகலை மறந்து மதுக்கடையில் குவிந்த குடிமகன்கள்…! சிவகங்கையில் அதிர்ச்சி!
No social distancing in sivagangai tasmac shop
சிவகங்கை:
சமூக விலகலை கடைப்பிடிக்காமல் சிவகங்கை மாவட்டம் புலியூர் மதுக்கடையில் மது வாங்க பொது மக்கள் வரிசையில் நின்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று தமிழகத்தில் 3509 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது.
இந் நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்த 3509 பேர்களில் 1834 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள்.
இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47,650 ஆக உயர்ந்துள்ளது. சென்னை போன்று மதுரையில் ஊரடங்கு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மது வாங்க காத்திருந்த மக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சிவகங்கை மாவட்டம் புலியூர் மதுக்கடையில் மது வாங்க பொது மக்கள் வரிசையில் நின்றனர். ஆனால்,சமூக விலகலைக் கண்டு கொள்ளாமல் நின்றதால் கொரொனா தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.