அமைச்சர் தங்கமணியின் மகனுக்கும் கொரோனா…! மருத்துவமனையில் அனுமதி!
Son of minister thangamani got corona positive
சென்னை:
அமைச்சர் தங்கமணியின் மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மின்துறை அமைச்சர் தங்கமணிக்கும், அவரது மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இருவரும் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நாமக்கல்லில், அவரது அலுவலகம் மூடப்பட்டுள்ளது. சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தங்கமணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக நிர்வாகிகள் பீதி அடைந்து உள்ளனர். குறிப்பாக, நேற்று முன்தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்து பேசி இருக்கிறார்.
மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பாக கடந்த 6ம் தேதி இரவு ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில்,துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தி உள்ளார்.
எனவே, இதில் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகையால் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.