குனியமுத்தூர் சமிதியீல் ஸ்ரீராமநவமி சிறப்பு பஜன்
ஸ்ரீசத்தியசாயிசேவா நிறுவனங்கள், குனியமுத்தூர் சமிதியீல் ஸ்ரீராமநவமி சிறப்பு பஜன் நடைபெற்றது.
இதில் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிறுவனங்கள் கோவை மாவட்ட தலைவர் திரு. வெங்கடேஷ் நாராயணன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். அதில் அவர் கூறுகையில் பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா அவர்கள் காட்டிய வழியில் நாம் அனைவரும் சென்று ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் என்றும்.
நமக்கு கிடைத்த இந்த ஆனந்தத்தினை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்,
நாம் சேவைகளை செய்யும் பொழுது அதில் எந்தவித தோய்வும் ஏற்படக்கூடாது என்று கூறினார், அவரது அருளால் மட்டுமே நாம் அனைவரும் அவரை அடைய முடியும்,
உலகம் முழுவதும் சாய் நிறுவனங்கள் தற்பொழுது செய்து வருகின்ற சேவைப் பணிகள் குறித்தும் மேலும் செய்யப்போகும் பணிகள் குறித்தும் அவரது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். நிறைவாக சமதி பொறுப்பாளர் திரு.ரவி சங்கர் அவர்கள் மாவட்ட தலைவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.