GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு
ஸ்வப்னா மூணாறு தப்பி வந்தாரா…? போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை!
Police searching swapna in munnar
மூணாறு:
தங்கம் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்வப்னா மூணாறுக்கு தப்பி வந்ததாக கிடைத்த தகவலில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலக முன்னாள் ஊழியர்கள் ஷரீத், ஸ்வப்னா ஆகியோருக்கு இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஷரீத் கைதான நிலையில் முக்கிய சூத்ரதாரியான ஸ்வப்னா தலைமறைவாக உள்ளார்.
யாரும் எளிதில் அடையாளம் காண முடியாத வகையில் பர்தா அணிந்து மூணாறுக்கு காரில் தப்பி வந்ததாக தகவல் கிடைத்தது. இதனால் மூணாறு அருகே போதமேடு பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளை நேற்று போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். தொடர்ந்து அங்கு தேடும் பணி நடந்து வருகிறது.