fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

சென்னையில் 22 பேர் கொரோனாவால் பலி…! அதுவும் ஒரே நாளில்…!

Today 22 corona dead in Chennai

சென்னை:

சென்னையில் ஒரே நாளில் மேலும் 22 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு மிக, மிக அதிகமாகி வருகிறது. அதை கட்டுப்படுத்த சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் சுகாதாரத் துறை அளித்துள்ள தகவலின்படி சென்னையில் மேலும் 22 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ஸ்டான்லி மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தலா 5 பேர், சென்னை ரயில்வே மருத்துவமனையில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இருவர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் அடுத்தடுத்து கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். ஒரே நாளில் சென்னையில் 22 பேர்கள் பலியானதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close