இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல் தேனியில் நல்லடக்கம்…

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா, நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் நீலாங்கரையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.திரை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும்பாரதிராஜாஉடலுக்குகண்ணீர்மல்கஅஞ்சலிசெலுத்தினார்.பாரதிராஜாவின்மறைவுதிரையுலகையேசோகத்தில்மூழ்கடித்தது.பாரதிராஜா உடல் தேனியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படும் என கூறப்பட்டது. அதன்படி இன்று காலை அவரின் உடல் கொடைக்கானல் செல்லும் வழி கட்ரோட்டில் உள்ள அவரின் பண்ணை வீட்டுக்குகொண்டு வரப்பட்டது.பண்ணைவீட்டில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜா உடலுக்கு பாரதிராஜாவின் உறவினர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் வடிவேலு, பாரதிராஜா உடலை கண்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தினார்.வடிவேலு கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. பின்னர் பாரதிராஜா மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்..