fbpx
Others

பிரதாப்—சரக்கு ரயிலின் பெட்டி தடம் புரண்டதே தீ விபத்துக்கு காரணம்…

ஆசிரியர்களை ஒருமையில் தரக்குறைவாக திட்டிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்!  ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்! - Seithipunalசரக்கு ரயிலின் பெட்டி தடம் புரண்டதே தீ விபத்துக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது என திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் பேட்டியளித்துள்ளார். மேலும் “ஐஓசி மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது அதிகாலை 5.20 மணிக்கு தீப்பிடித்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் இல்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. சரக்கு ரயிலின் பெட்டி தடம் புரண்டதே தீ விபத்துக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகிறது ‘எனவும் தெரிவித்துள்ளார். சரக்கு ரயிலில் டீசல் உள்ள பெட்டிகள் வெடித்து சிதறுவதால் பதற்றம் நிலவுகிறது. சரக்கு ரயிலில் பற்றி எரியும் தீயை அணைப்பது வீரர்களுக்கு சவாலாக மாறியுள்ளது. “திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் உயிரிழப்பு இல்லை. அரக்கோணத்தில் இருந்து 2 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்” என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close