அசாமின் ஜோர்ஹத் Dist அச்சுறுத்தி வரும்–சிறுத்தைப் புலி
அசாமின் ஜோர்ஹத் மாவட்டம் தியோக் பகுதி அருகில் செனிஜான் என்ற இடத்தின் மழைக்காடு ஆய்வு மையம் உள்ளது.: இந்தப் பகுதியில் சுற்றித் திரிந்து வரும் ஒரு சிறுத்தைப் புலி, அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது.இந்த நிலையில், இந்தச் சிறுத்தைப் புலி குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் லால் மீனா செய்தியாளர்களிடம் கூறியதாவது : 3 வனத்துறை உள்பட 13 பேரை இந்தச் சிறுத்தைப் புலிதாக்கியுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிலர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
: மேலும், இந்தச் சிறுத்தைப் புலி சமீபத்தில் அங்குள்ள ஆய்வு மையம் பகுதி அருகில், பல அடி உயரமுள்ள சுற்றுச்சுவரைத் தாண்டி தப்பிச் சென்றதாகவும் கூறியுள்ளார்.இந்த சிறுத்தைப் புலியை விரைவில் பிடிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.