திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்..!
Ramdoss condolence
சென்னை:
திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:
சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ.அன்பழகன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
சென்னை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளில் குறிப்பிடத்தக்கவரான ஜெ.அன்பழகன் பல்வேறு தருணங்களில் என்னைச் சந்தித்துப் பேசியுள்ளார். என் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சியின் சமூகநீதி கொள்கைகளை பல நேரங்களில் வியந்து பேசியவர். சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் இனைந்து அரசியல் பணியாற்றியவர்; அரசியல் கடந்த நட்பைப் பராமரித்து வந்தவர்.
ஜெ.அன்பழகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தி.மு.க.வினருக்கும், பா.ம.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.