யாரும் தொட முடியாத இடத்தில் மகாராஷ்டிரா கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை கடந்தது!!
Maharashtra records 70000 corona cases
டெல்லி:
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 70,013 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,98,706 ஆக அதிகரித்துள்ளது. 24 மணிநேரத்தில் மட்டும் 8171 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
204 பேர் பலியாகி விட்டனர். கொரோனாவால் இதுவரை 5598 பேர் உயிரிழந்த நிலையில், 95,527 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி உள்ளது.
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 70,013 பேருக்கு கொரோனா உள்ளது. இதுவரை 2362 பேர் உயிரிழந்துவிட்டனர். 30,108 பேர் குணமடைந்துள்ளனர்.
தேசிய அளவில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 23,495 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 184 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 13,170 பேர் குணமடைந்துள்ளனர்.
டெல்லி 3ம் இடத்தில் உள்ளது. 20,834 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட, 523 பேர் உயிரிழந்துள்ளனர். 8,746 பேர் குணமடைந்துள்ளனர்.