கலவைப்புதூர் ஊராட்சியில் மாவட்ட இணை பதிவாளர் ஆய்வு

கலவை ஜூன் 18.-
கலவை அடுத்த கலவைபுதூர் ஊராட்சியில் ராணிப்பேட்டை மாவட்ட இணை பதிவாளர்
ஜெ.மலர்விழி ஆய்வு மேற்கொண்டார் ரேஷன் கடையில் அரிசி மற்றும் மற்ற பொருட்களின் தரம் குறித்தும் எடை எந்திரம் சரியாக வேலை செய்கிறதா என்பதை கேட்டறிந்தார் அதனை தொடர்ந்து கிராமத்தில் உள்ள உடற்பயிற்சி கூடம், நீர் தேக்க தொட்டியை பார்வையிட்டார் நடுநிலைப் பள்ளியை பார்வையிட்டு மாணவர்களிடையே உரையாடி கல்வித்தரத்தை சோதித்தறிந்தார் தொடர் நிகழ்வாக அங்கன்வாடிக்குள் சென்றவர் குழந்தைகளின் வருகை பதிவேட்டை பார்வையிட்டு அவர்களுக்கு சரியான உணவு வழங்கப்படுகிறதா என்பதெல்லாம் கேட்டறிந்தார் நூலகத்தையும் ஆய்வு செய்தார் இந்த ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் நிழல் கூடம் அமைக்கவும் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிக்கும் சாதி இந்துக்கள் பகுதிக்கும் இடையே இணைப்பு சாலை அமைத்து தரவும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் பழைய கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித் தர இணைப்பதிவாளரிடம் கோரிக்கை வைத்தார்.