fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

மருத்துவக்குழுவுடன் நாளை ஆலோசனை நடத்தும் முதலமைச்சர்…!

Corona lockdown issue: Chief minister edapaddi palanisamy discussion tomorrow

சென்னை:

சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது 60 நாட்களை கடந்து, மே 31ம் தேதியுடன் இந்த ஊரடங்கு முடிவடைகிறது. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர்.

கடந்த 14ம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு எதிரான  அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close