கோவில்நிதிகோவிலுக்கே த.வெ.க., அரசின் கொள்கை அறிவிப்பு–ஹிந்து முன்னணிவரவேற்ப்பு…
காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது: ‘கோவில் நிதி கோவிலுக்கே’ என, கவர்னர் உரையில் வெளியான, த.வெ.க., அரசின் கொள்கை அறிவிப்பை வரவேற்கிறோம். அதை, எதிர்கட்சி தலைவர் உதயநிதி விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. வேற்று மத வழிபாட்டு தலங்களுக்கு வரும் வெளிநாட்டு நிதி குறித்து உதயநிதி விமர்சிப்பாரா? கடந்த தி.மு.க., அரசின் ஊழல்நிர்வாகத்தால்,கோவில்களின் நிதிசீரழிக்கப்பட்டதற்கு,நீலகிரிவிநாயகர்கோவில்சீரமைப்புதிட்டமேசிறந்தஉதாரணம். திருவண்ணாமலையில் நீதிபதி நேரில் பார்வையிட்டு கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.கோர்ட்வழிகாட்டுதலை கடந்த தி.மு.க., அரசு கொஞ்சமும் மதிக்கவில்லை. கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து தராமல், ஆடம்பர செலவுகளை செய்து, கோவில் நிதியை திட்டமிட்டு அழித்தது தி.மு.க., அரசு. கோவில்களின் அனைத்து சொத்துகளையும் முழு ஆய்வு செய்து, கம்ப்யூட்டரில் விபரங்களை பதிவுசெய்ய வேண்டும். இவ்வாறு ஹிந்து முன்னணி மாநிலதலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.