GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா
சீன ராணுவ தாக்குதலால் 4 இந்திய ராணுவ வீரர்கள் கவலைக்கிடம்..? எல்லையில் டென்ஷன்!
4 Indian Soldiers serious
டெல்லி:
சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் காயமடைந்த மேலும் 4 இந்திய ராணுவ வீரர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.
லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவம் இடையேயான தாக்குதலில் இந்திய ராணுவ உயரதிகாரி ஒருவரும், 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். அவர்களில் பழனி என்ற ராணுவ வீரர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.
அதன் காரணமாக எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்க, மத்திய அரசு முக்கிய ஆலோசனை நடத்தியது. மோதலில் 20 இந்திய வீரர்களும், 43 சீன வீரர்களும் உயிரிழக்க பதற்றத்தை அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், சீனாவுடனான மோதலில் காயமடைந்த மேலும் 4 இந்திய ராணுவ வீரர்கள் கவலைக்கிடமாக உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன் எதிரொலியாக எல்லையில் உச்சக்கட்ட பதற்றம் உருவாகி உள்ளது.