ஆவடி காவல் ஆணையரகத்தின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை…..
இன்று (23.05.2026) M4 செங்குன்றம் காவல் நிலைய காவல்ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார், கஞ்சா விற்பனை தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், செங்குன்றம் பாத்திமா தெரு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக இருந்தநபர்களைசோதனைசெய்ததில்,அவர்கள்சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுமார் 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, எதிரிகளான1. தேவி (வ/35), க/பெ மாரி, பெரம்பூர், சென்னை. 2. விஜய் (வ/21), த/பெ மாரி, பெரம்பூர், சென்னை. 3. அனிதா (வ/34), க/பெ சரவணன், பெரம்பூர், சென்னை. 4. நவீன் குமார் (வ/25), த/பெ முனியாண்டி, காசிமேடு, சென்னை. ஆகியோரை கைது செய்து, எதிரிகள் மீது செங்குன்றம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது..
