தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 3,680 பேருக்கு பாதிப்பு!
3,680 people affected by corona in Tamil Nadu today

சென்னை:
தமிழகத்தில் இன்று மட்டும் 3,680 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1,205 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் 74,969 பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 793,802 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் 3,680 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை; 35,921
இதுவரை பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை 14,64,281
இன்று மட்டும் 64 பேர் கொரானாவினால் பலியாகினர்.
இதுவரை பலி எண்ணிக்கை 1,829 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 4,163 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை;82,324
இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது.
















