ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
சென்னையில் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு பலி…! மக்கள் அதிர்ச்சி!
In Chennai 4 more dead due to corona

சென்னை:
சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகி இருக்கின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 1,149 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,333 ஆக உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 173 ஆக இருக்கிறது. 12,757 பேர் குணமடைந்துள்ளனர்.

இந் நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கோயம்பேட்டைச் சேர்ந்த 69 வயதான முதியவர் ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.
திருவல்லிக்கேணி சாந்தி தெருவைச் சேர்ந்த 42 வயதான நபர். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பலியாகினர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 69 வயது, 57 வயதான நபர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.















