fbpx
RETamil NewsTrending Nowஇந்தியாதமிழ்நாடு

சமூக விலகலை ’சாய்த்த சரக்கு’…! மதுக்கடைகளில் முண்டியத்த கூட்டம்..!

Heavy crowd in liquor shops in india

டெல்லி: டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் மது வாங்க சமூக விலகலை மறந்து குடிமகன்கள் முண்டியடித்தபடி நின்றிருந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் வரும் 17 வரை 3ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஆனால்,  சில நிபந்தனைகளுடன் மதுக்கடைகளை திறக்கலாம் என்று  மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

இதையடுத்து, இன்று காலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். தலைநகர் டெல்லியில் மாளவியா நகரில் மதுக்கடை முன்பு காணப்பட்ட கூட்டத்தை கண்ட விற்பனையாளர் காவல்துறைக்கு தகவல் அளித்திருக்கிறார்.

டெல்லியை போன்று நாட்டின் பல பகுதிகளில் மதுக்கடைகள் முன்பு கூட்டம் முண்டியத்து காணப்படுகிறது. சத்தீஸ்கரில் சமூக விலகலை மறந்து மதுப்ரியர்கள் குவிய ஆரம்பித்துள்ளனர்.

பெங்களூரிலும் இதே நிலை காணப்படுகிறது. கடைகள் முன்பு வயது வித்தியாசமின்றி அனைவரும் குவிந்தனர். மதுப்ரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதற்காக வட்டங்களும் வரையப்பட்டிருந்தன.

ஆனால், எதை பற்றியும் கவலைப்படாமல் மதுப்ரியர்கள் கடைகள் முன்பு நெருக்கடியடித்துக் கொண்டு நின்றனர். பல பகுதிகளில் காவல்துறை வந்தபிறகே நிலைமை ஓரளவு சீரானது.

Tags

Related Articles

Back to top button
Close
Close