RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று மாட்டுப்பொங்கல் உற்சாக கொண்ட்டாட்டம்!
உழவர் திருநாளாம் பொங்கல் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
உழவுக்கு உதவும் மாடுகளுக்கும், பால் சுரக்கும் பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசி மணியைக் கட்டிவிட்டு மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து ஊர்வலமாகக் கொண்டு செல்வது வழக்கம்.
ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகள் மூலம் மாடுகள் மீதான மனிதர்களின் பாசமும் இணைந்திருப்பது தான் தமிழர்களின் சிறப்புகளில் ஒன்றாக விளங்குகிறது.