தமிழகத்தில் உள்ள ஒருபெரும்பாலானமாவட்டத்தில் சிதறிகிடைக்கும்குப்பைகள்…?
வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு சன்னதி தெருவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் வியாபாரிகள்அழுகியகாய்கறிகள்,பழங்களைகொட்டுகிறார்கள். அந்தக் குப்பைகளைநகராட்சி துப்புரவு ஊழியர்கள் சரியாக அகற்றாததால் கால்நடைகள் குப்பைகளை கிளறி விட்டு அழுகிய காய்கறிகள், பழங்களை சாப்பிடுகின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளைஅகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? சேலம் கோரிமேட்டில் இருந்து குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா செல்லும் வழியில் சாலையோரம் அதிகளவில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடுஏற்படும் நிலை உள்ளது. மேலும் அந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் இரண்டு குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த குப்பைத்தொட்டிகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாதநிலையில் உள்ளன. எனவே புதிதாக இரண்டு குப்பைத்தொட்டிகள் அமைத்து, சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.