fbpx
Others

75-வது சுதந்திரம்–தெற்குரெயில்வே பள்ளிகள் கலந்து கொண்டன.

. இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தெற்கு ரெயில்வே பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. அதன்படி தெற்கு ரெயில்வேயின் பள்ளிகள் பங்குபெரும் கலை நிகழ்ச்சிகள், சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில்வே உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தெற்கு ரெயில்வேயில் உள்ள 7 ரெயில்வே பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கொண்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் கூடுதல் மண்டல ரெயில்வே மேலாளர் ஆனந்த் தலைமை தாங்கி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். ரெயில்வே பள்ளிகளின் சென்னை மண்டல அதிகாரி அரவிந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரம்பூர் ரெயில்வே பள்ளியில் கலை நிகழ்ச்சிகள்

Related Articles

Back to top button
Close
Close