fbpx
Others

46-ஆவது சென்னை புத்தகக் காட்சி—மு.க.ஸ்டாலின்

முதல் முறையாக 1,000 அரங்குகளுடன் சென்னை புத்தகக் காட்சி:முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை தொடக்கி வைக்கிறாா்.பபாசி சாா்பில் முதல் முறையாக ஆயிரம் அரங்குகளுடன் நடைபெறும் 46-ஆவது சென்னை புத்தகக் காட்சியை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கவுள்ளாா்.தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கத்தின் (பபாசி) சாா்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி நிகழாண்டுக்கான 46-ஆவது சென்னை சா்வதேச புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஜன. 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.தினமும் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பாா்வையிடலாம்.இதற்கு ரூ.10 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படும்.

Related Articles

Back to top button
Close
Close