தேனி –பெரியகுளம்தொல்.திருமாவளவன் எம்.பி. மணிவிழா
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. அவர்களின் 60வது மணிவிழாவை முன்னிட்டு- டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கட்சி கொடியேற்றி, பெயர் பலகை திறந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் ஜோதி முருகன் தலைமை தாங்கினார்.கட்சிக் கொடியினை மாவட்ட செயலாளர் நாகரத்தினம் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.மாவட்ட பொருளாளர் ரபீக்,ஒன்றிய செயலாளர் ஆண்டி, நகர்மன்ற துணைத் தலைவர் பிரேம்குமார்,
மாநிலத் துணைச் செயலாளர்கள் கோமதி, பாஸ்கரன் ,இளமதி மாவட்ட அமைப்பாளர்கள் தொல்.தளபதி சேகுவேரா, கருத்தையன்,
நிர்வாகிகள் சையது இப்ராஹிம், தமிழ்ச்செல்வன், செல்வராஜ்,
மணிபாரதி, இனியன் மற்றும் தாய்மண் ஆட்டோ,நிலைய நண்பர்கள் திரளானோர்கலந்து கொண்டனர்.மேலும் தாய் மண் ஆற்றல் நிலையம், தென்கரை தாமரை குளம், கைலாச பட்டி சரத்துப்பட்டி தேவதானப்பட்டி காந்திநகர்,உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கட்சி கொடி ஏற்றி பலகை திறந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.