fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

5-வது சர்வதேச பலூன் திருவிழா-செங்கல்பட்டில் தொடங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சர்வதேச பலூன் திருவிழா நேற்று தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக வருடாந்தோறும் சர்வதேச பலூன் திருவிழா நடத்திவரப்படுகிறது. இந்நிலையில் 5-வது சர்வதேச பலூன் திருவிழா நேற்று செங்கல்பட்டில் உள்ள மகேந்திர வேல்டு சிட்டியில் காலை தொடங்கியது.

இந்த திருவிழாவில் அமெரிக்கா, மெக்சிகோ , ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 4 ராட்சத பலூன்கல் பறக்கவிடப்பட்டன. இதற்காக பல்வேறு நாடுகளை சேந்த 24 பைலட்டுகள் செங்கல்பட்டிற்கு வருகை தந்தனர்.மகேந்திர வேல்டு சிட்டி மைதானத்தில் துவங்கியுள்ள இந்த திருவிழா இன்றும் நடத்தப்பட்டு 6 -ஆம் தேதிவரை தொடருகிறது.

தினசரி காலை, மாலை என இரண்டு வேளைகளில் இந்த பலூன் திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் 50 ஆயுரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close