மூன்று இந்திய வீரர்கள் பலி- மணிப்பூரில் பயங்கரவாத தாக்குதல்!
3 Assam Rifles personnel killed
மணிப்பூர் சந்தல் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுமார் 3 இந்திய வீரர்கள் மரணமடைந்துள்ளார். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று மாலை சுமார் 6:30 மணிக்கு சந்தல் மாவட்டம் ,இந்தியா-மியான்மார் எல்லை பகுதியில் PLA தீவிரவாத கும்பல் தாக்குதல் நடத்தியது. முன்பே திட்டமிடப்பட்டு இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதலில் IED வெடிப் பொருட்களை எரிந்து தாக்குதலை ஆரமித்து அந்த கும்பல், பிறகு வீரர்களை நோக்கி சுட ஆரமித்தது. அவர்களை எதிர்த்து சுட ஆரமித்த இந்திய வீரர்களில் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் நாலு ராணுவ வீரர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மேலும் தாக்குதல் நடைபெறும் என கருதி தற்பொழுது அந்த பகுதியில்
நிறைய ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போன்று PLA கும்பலால் கடந்த 2017 ஆம் ஆண்டு அசாமில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக PLA அமைப்பை சார்ந்த 6 நபர்கள் மீது NIA குற்றப்பத்திரிக்கை ஒன்றை இந்த வருடத்தின் முதலில் தாக்குதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.