11 மாவட்ட ஆட்சியர்கள்இடமாற்றம்.
செய்தி மக்கள் தொடர்பு துறையின் இயக்குனராக உள்ள ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் செய்தி மக்கள் தொடர்பு துறையின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார் மே லும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதலாக அவருக்கு சிறப்பு திட்ட அமலாக்கத்துறையின் இணை செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது, இரண்டும் அமைச்சர் உதயநிதி இலக்கா என்பது குறிப்பிடதக்கதுதிருப்பூர் மாநகராட்சி ஆணையராக உள்ள கிராந்தி குமார் பட்டி கோவை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார். பள்ளிக் கல்வித் துறைக்கு சிறப்புச் செயலாளராக ஜெயந்தி ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இந்து அறநிலையத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். செங்கல்பட்டு சார் – ஆட்சியர் சஞ்சீவனா தேனி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார்.
வ. எண் | மாவட்டம் | ஆட்சியர் |
1 | திருநெல்வேலி | கார்த்திகேயன் |
2 | தென்காசி | ரவிச்சந்திரன் |
3 | விருதுநகர் | ஜெயசீலன் |
4 | கிருஷ்ணகிரி | தீபக் ஜேக்கப் |
5 | விழுப்புரம் | பழனி |
6 | கன்னியாகுமரி | ஸ்ரீதர் |
7 | பெரம்பலூர் | கற்பகம் |
8 | தேனி | சஜ்ஜீவனா |
9 | கோவை | கிராந்தி குமார் பட்டி |
10 | திருவாரூர் | சாருஸ்ரீ |
11 | மயிலாடுதுறை | மகாபாரதி |