fbpx
Others

வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில் சிறப்பு செய்தி

வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் மலையேற வரும் பக்தர்களுக்கு சேவை பணிகள் ஶ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனம் கோவை மாவட்டம் இளைஞர் குழு சார்பில் இரண்டாவது வாரமாக அருள்மிகு பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் மலையேற வரும் பக்தர்களின் உடைமைகளை பரிசோதனை செய்தல், பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைத்து அவர்கள் கொண்டு வந்த உணவு பொருட்களை காகிதங்களில் கட்டிதறுதல் மற்றும் தூய்மை பணியினை கோவை மாவட்ட வனத்துறையுடன் இணைந்து சிறப்பாக சேவை பணிகள் நடைபெற்றது.
இதில் சத்ய சாய் சேவா நிறுவனம் தமிழ்நாடு மாநில இளைஞர் ஒருங்கிணைப்பாளர் திரு.பிரசன்னா கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கோவை மாவட்டம் இளைஞர் அணி சேவாதள தொண்டர்கள் 25 பேர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு தொடங்கிய இந்த பணிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி வரை இடைவிடாது நடைபெற்றது.
அடுத்த வாரம் அதே நேரத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஆர்வம் கொண்டவர்கள் பங்கேற்கலாம்.


 

 

 

Related Articles

Back to top button
Close
Close