Others
வெளி மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு நலன் கூட்டம்
வெளி மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு நலன் குறித்த கலந்த ஆலோசனைக் கூட்டம் !செங்குன்றத்தில் நடந்தது!! கே. பி .எம். திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார் .பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் அங்கு பணி புரியும் வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் வணிகர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கூடுதல் ஆட்சியர் ரிஷப். பொன்னேரி கோட்டாட்சியர் ஐஸ்வர்யா. வட்டாட்சியர் செல்வகுமார் .ஆவடி காவல் இணை ஆணையர் விஜயகுமார். செங்குன்றம் காவல் துணை ஆணையர் மணிவண்ணன். தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் சுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.