விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கல்லணையில் இருந்து தண்ணீர்…
பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியம் மேலத்திருக்கழிபாலை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கல்லணையில் இருந்து தண்ணீர் பெற்று கீழணை மூலமாக ராஜன் வாய்க்கால் வழியாக மேலத்திருக்கழிபாலை விவசாய பாசன தண்ணீர் வழங்க முயற்சி செய்த கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் திரு எம்.ஆர்.கே.பி.கதிரவன் அவர்களுக்கும், பொதுபணித்துறை சிதம்பரம் பகுதி செயற்பொறியாளர் அவர்களுக்கும் எஸ்.டி.ஓ மற்றும் உதவி செயற்பொறியாளர் அவர்களுக்கும் ஒன்றிய செயலாளர் திரு இரா.கலையரசன் அவர்களுக்கு மேலத்திருகழிபாலை விவசாயிகளின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்..
கவரப்பட்டு மற்றும் மேலத்திருக்கழிப்பாளை பகுதியில் பயிரிடப்பட்டு உள்ள நெற்பயிருக்கு கடைசீ தண்ணீர் இன்றி தவித்த உழவர்கள் கோரிக்கையை ஏற்றுகல்லணையிலிருந்து தண்ணீர் வாங்கி வடக்கு ராஜன் வாய்க்கால் வழியாக கவரப்பட்டு வாய்க்காலுக்கு மூன்று நாட்களில் தண்ணீர் கொடுத்தநீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் இதற்கு துணையாக நின்ற ஏனைய நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். கவரப்பட்டு மற்றும் மேலத்திருக்கழிப்பாளை பகுதி உழவர்கள்