விஜயகாந்த்–ஆங்கில புத்தாண்டையொட்டி தொண்டர்களை சந்தித்தார்
: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அங்கிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களை பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தினார். ஆங்கில புத்தாண்டான நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேமுதிக தொண்டர்களை சந்திப்பதற்காக, விஜயகாந்த் வந்தார். பின்னர், அங்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை நோக்கி கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். நீண்ட நாளுக்கு பிறகு விஜயகாந்த்தை நேரில் பார்த்த சந்தோஷத்தில் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் காணப்பட்டனர். மேலும், விஜயகாந்துக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்க வந்த தொண்டர்களுக்கு பிரேமலதா தலா 100 ரூபாய் கொடுத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். இதற்கு முன் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்தார்.