வாலாஜா ஊராட்சி ஒன்றியம்–செய்தி
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி (20.09.2023) அன்று வாலாஜா ஊராட்சி ஒன்றியம் திருப்பாற்கடல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள் கொண்ட கட்டடங்கள் கட்டுவதற்கு பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.வளர்மதி, இ.ஆ.ப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.எல். ஈஸ்வரப்பன். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திருமதி.ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர் திரு.சே.வெங்கட்ரமணன். உதவி செயற்பொறியாளர் திருமதி.திரிபுரசுந்தரி. முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.உஷா மற்றும் பலர் உள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில்….திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஏர்வாடி — வள்ளியூர் மெயின் ரோட்டில் கன்கார்டிய அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் பழைய மரங்களுக்கு பராமரிப்பு பணிகள் வள்ளியூர் பசுமைஇயக்கம்சார்பாகநடைபெற்றது.பழையமரங்களுக்குநீர்பிடிப்புக்குபாத்திகள்அமைத்தும்,மரங்களின்கிளைகளை சீரமைத்தும்,சரிந்துள்ள மரங்களை நேர்படுத்தியும், பணிகள் நடைப்பெற்றது. இச்சேவையில் வள்ளியூர் பசுமை இயக்க தலைவர் பசுமை நாயகன் க.சித்திரை, பசுமை இயக்க நிர்வாகிகள் சங்கனாபுரம் சிவசுப்பிரமணியன், சக்திஸ் ஆகியோர் கலந்து கொண்டு இச்சேவையில் ஈடுபட்டனர்..