fbpx
Others

வாடிப்பட்டி ஊராட்சி—குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….?

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் வாடிப்பட்டி ஊராட்சி இந்திரா காலனியை சேர்ந்தபொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்காததை கண்டித்தும் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டால் முரண்பாடாக பேசுவதாகவும்,பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த தேவதானப்பட்டி காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் அடிப்படையில் சாலை மறியலை கைவிட்டனர்.திடீர் சாலை மறியலால் வாடிப்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

Related Articles

Back to top button
Close
Close