fbpx
Others

வாக்காளர்களிடம் ஓட்டு போட அக்கறை இல்லை; தேர்தல் கமிஷன் ஆதங்கம்

 குஜராத்தில் முதல் கட்ட தேர்தலில் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் ஓட்டு போட அக்கறையற்ற நிலை நீடிப்பதாக தேர்தல் கமிஷன் ஆதங்கம் தெரிவித்துள்ளது.  குஜராத் இமாசலபிரதேச மாநிலத்தில்  68 இடங்களைக் கொண்டுள்ள சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந் தேதி தேர்தல் நடந்தது. 182 இடங்களைக் கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. முதல் கட்ட தேர்தல், 1-ந் தேதி நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் நாளை (5-ந் தேதி) நடக்க உள்ளது. தேர்தல் கமிஷன் ஆதங்கம் இதையொட்டி தேர்தல் கமிஷன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறியுள்ள முக்கிய விஷயங்கள்:- * இமாசலபிரதேசத்தில் நகர்ப்புற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களில் பலரும் ஓட்டு போட வில்லை. சிம்லாவில் 62.53 சதவீத வாக்குகளே பதிவாகின. கடந்த தேர்தலைக் காட்டிலும் இது 13 சதவீதம் குறைவு. * குஜராத்தில் முதல் கட்ட தேர்தலில் நகரங்களில் நடந்த வாக்குப்பதிவு, அங்குள்ள வாக்காளர்கள் ஓட்டு போடுவதில் அக்கறையின்றி இருப்பது தொடர்கிறது என்பதையே காட்டுகிறது. இதனால் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த அளவைவிட குறைவு * சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் தொகுதிகளில் ஒட்டு மொத்த அளவான 63.3 சதவீதத்தையும் விட குறைவு. *காந்திதாம் தொகுதியில் தொழில் நிறுவனங்கள் நிறைய உள்ளன. அங்கு மிகக்குறைந்த அளவாக 47.8 சதவீத வாக்குகளே பதிவாகி இருக்கிறது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 6.34 சதவீதம் குறைவு. * அடுத்தபடியாக சூரத்தில் உள்ள கரஞ்ச் தொகுதியில் கடந்த தேர்தலில் 55.91 சதவீத வாக்குகள் பதிவாகின. இப்போது அதைவிட 5.37 சதவீதம் குறைவு. * குஜராத்தில் கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் நகரங்களில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. கடந்த 2017-ல் முதல் கட்ட தேர்தலில் 66.79 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்த தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு 63.3 சதவீதம் ஆகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close