ராணி எலிசபெத் மறைவு -இந்தியா இன்று துக்கம் அனுசரிப்பு
டெல்லி: ராணி எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து இந்தியா சார்பில் இன்று துக்கம் அனுசரிக்கப்படுகிறது. செங்கோட்டை, ராஷ்டிரபதி பவனில் மூவர்ணக் கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் மகாராணிக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இந்தியாவில் எலிசபெத்தின் மறைவைக்கு செப்டம்பர் 11-ம் தேதி நாடு முழுவதும் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், அன்றைய நாள் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது..