ராணிப்பேட்டை–மக்கள் மன்றம் தேர்தல் பரப்புரை- மதிமுக பொதுக்கூட்டம்..
ராணிப்பேட்டை மாவட்டம் மக்கள் மன்றம் சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இந்திய கூட்டணியை ஆதரித்து தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் மகேஷ் பேசுகையில் தற்போது நடைபெற இருக்கின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 140 கோடி இந்திய மக்களின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல்கள் இருக்காது, மாநிலங்கள் இருக்காது, அரசமைப்புச் சட்டம் இருக்காது,பாப்பானுக்கே எல்லாம் என்னும் மனுநீதியே ஆட்சி செய்யும், ஒரே மதம் , ஒரே கடவுள், ஒரே மொழி, ஒரே சட்டம் ,ஒரே கட்சி ,ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு,ஒரே போலீஸ் என பாசிசத்தை நோக்கியும் கார்ப்பரேட் நலன் காக்கும் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது எனவே இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற இந்திய கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று பல்வேறு கருத்துகளை பேசினார். இக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சீ.ம .ரமேஷ் கண்ணா,திமுக ராணிப்பேட்டை நகர செயலாளர், மதிமுக மாவட்டச் செயலாளர் உதயகுமார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், மக்கள் மன்ற பொறுப்பாளர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.