Others
ராகுல்-கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப்படும்
- ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரை ஒருபோதும் நிறுத்தப்படாது என்று காங்கிரஸ் அறிவித்து உள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவிவிட்டதால் ராகுல்காந்தி நடத்தி வரும் ஒற்றுமை யாத்திரையை நிறுத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தியது. ஆனால் யாத்திரையை நிறுத்த முடியாது என்று காங்கிரஸ் அறிவித்து விட்டது.இதுபற்றி கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கூறுகையில்,’ ராகுல் நடத்தி வரும் ஒற்றுமை யாத்திரையில் கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப்படும். ஆனால் யாத்திரை நிறுத்தப்படாது. ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் அவர்களது கொள்கைகளைப்பற்றி பேச உரிமை உண்டு. ஆனால் காங்கிரஸ் யாத்திரையை கண்டு அரசு பயந்து விட்டது. அதனால் தான் யாத்திரையை நிறுத்த பல்வேறு உத்தரவுகளையும், கடிதங்களையும் அவர்கள் எழுதுகிறார்கள். அவர்கள் கொரோனாவை கண்டு பீதி அடையவில்லை. யாத்திரையை கண்டு பீதி அடைந்து விட்டனர். அவர்களது கடிதத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவது இல்லை’ என்றார்