சோழவரம்–கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம்..


சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி 101வது பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் எம்.ஏ. நகர் பேருந்து நிலையம் அருகே சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளரும் சோழவரம் ஒன்றிய துணைப் பெருந்தலைவருமான மீ.வே. கர்ணாகரன் தலைமையில் நடைபெற்றது.இதில் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் அ.காசிம் முகம்மது, துணைச் செயலாளர்கள் கே.எம்.துரைவேல், ப.சீனிவாசன், கி.வீரம்மாள், பொருளாளர் செ.அரசு, மாவட்ட பிரதிநிதிகள் இரா.விஜயன், பா.சேகர், பொன்.கோதண்டன், விளையாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சன்.முனியாண்டி, இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் நா.பரசுராமன், ஒன்றியக் கவுன்சிலர்கள் சந்திரா வாசுதேவன், ருக்மணி ரவிச்சந்திரன், மாலதி மகேந்திரன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை, இளைஞரணி, மகளிரணி அணியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.