யுத்த வர்மா போர்க்கலை–சிறப்பு செய்தி
தமிழ்நாடு சிலம்பக் கழகத்தின் கீழ் செயல்படும் யுத்த வர்மா போர்க்கலை சிலம்ப பள்ளியின் சார்பில் மாபெரும் சிலம்பப் போட்டி திருவொற்றியூர் பூந்தோட்ட பள்ளி திடலில் நடைபெற்றது. மாணவர்களுக்கான போட்டியை சென்னை உயர் நீதிமன்ற காவல் துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர்.லட்சுமணனும் மாணவி களுக்கான சிலம்ப போட்டியை டெல்லி தேசிய துப்புரவு தொழில் ஆணைய தலைவரின் அலுவல்சாரா உதவியாளர். ஜி.ஹேமலதா தொடங்கி வைத்தார்.இப்போட்டியில் 500 பேருக்கு மேல் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கே. பி .பி .சங்கர் வழங்கினார்.மாநில நிர்வாகிகள் தலைவர் .டாக்டர். சி. முனிய சாமி .பொதுச் செயலாளர் சிலம்ப ஜாம்பவான் சோழா. ஆ .ஞானம் துணை தலைவர்கள் கலை முதுமணி. ஆர். முருக கனி. கோபால் ஆசிரியர் .பொருளாளர். அருண் கேசவன். துணை செயலாளர். விஸ்வநாதன்காப்பாளர்.கே. கணேசன் ஜி மற்றும் சவுந்தரராஜன். விஜயன். சரவணன். பரசுராமன். உள்பட பலர் கலந்து கொண்டனர் .போட்டி ஏற்பாடுகளை யுத்த வர்மா போர்கலை அகாடமி நிறுவனத் தலைவர். சண்முகம் சிறப்பாக செய்திருந்தார்.