சென்னையில் மிகவும் சேதமடைந்த 46 அரசு பள்ளிகள் கண்டறியப்பட்டு சீரமைக்கப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் சீரமைக்க ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15க்குள் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூர்வாரும் பணிகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளதாக மேயர் பிரியா பேட்டியளித்தார்.