-
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை சென்றுள்ள விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது பெரியப்பாவும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை நேரில் சென்று சந்தித்தார்.நாளை நடைபெறவுள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை சென்றுள்ளார். அப்போது அவரது பெரியப்பாவும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை டி.வி.எஸ். நகரில் உள்ள அவரது வீட்டில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அழகிரி, பெரியப்பாவை பார்க்க என் தம்பி மகன் வருகிறார் என சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.மேலும், “உதயநிதியை சந்தித்தது எல்லையில்லா மகிழ்ச்சி. அவரை சிறு வயதில் இருந்து எனக்கு தெரியும். அவர் அமைச்சர் ஆனது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நான் மீண்டும் திமுகவில் தொடர்ந்து செயல்படுவது குறித்து தலைமை தான் முடிவு செய்யும்” என தெரிவித்தார்.இதுகுறித்து பேசிய அமைச்சர் உதயநிதி, “அமைச்சர் ஆனதற்கு பின்னதாக பெரியப்பாவை சந்தித்து ஆசி பெறுவதற்காக வந்தேன்” என கூறினார். அவருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இருந்தார்..
Others