முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலைசென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில்திறப்பு.
பின்னர், சிலை திறப்பு விழா பேருரைநிகழ்ச்சி, கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின்பேசியபோது, ‘‘நாடு முழுமைக்கும் பரவி இருக்கும் சமூகநீதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாங்கள். வி.பி.சிங்குக்கு சிலை வைப்பதன்மூலம் அவருக்கு காட்ட வேண்டிய நன்றியை தெரிவித்துள்ளோம். வி.பி.சிங் மற்றும்அவரது தியாக வாழ்வு பற்றி நாட்டில்ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளவேண்டும். குறிப்பாக, இளைஞர்களுக்கு அவரது வாழ்வு திரும்பதிரும்ப சொல்லப்பட வேண்டும் என்பதால்தான், மாநிலக் கல்லூரியில் சிலை அமைத்துள்ளோம்’’ என்றார். வி.பி.சிங் மகன் அஜயா சிங் பேசும்போது, “எனது தந்தைக்கு சிலை அமைத்த தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். வி.பி.சிங் தனது அனுபவங்கள் குறித்துஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையை அவர் வாசித்தார்.நிகழ்ச்சிக்கு பிறகு, செய்தியாளர்களிடம் வி.பி.சிங் பேத்தி ரிச்சா மஞ்சரி சிங் கூறும்போது, ‘‘தேசிய அளவில் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில், தாத்தாவின் சிலை இங்கு திறக்கப்பட்டிருப்பது பெருமையாக உள்ளது. மண்டல் ஆணைய பரிந்துரையை அமல்படுத்தியபோது, பலருக்கும் அவர்வில்லனாக தெரிந்தார். அவர் செய்தது எவ்வளவு சவாலான விஷயம்என்பது இப்போதுதான் தெரிகிறது.அவர் அப்போது மேற்கொண்ட இந்தசிறப்பான முயற்சிதான் தற்போது சமூகத்தில் சரியான அளவு இடஒதுக்கீட்டுக்கு வழிவகுத்துள்ளது’’ என்று பெருமிதத்துடன் கூறினார்.நிகழ்ச்சியில், துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மு.பெ.சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட எம்.பி.க்கள்,தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா,பொதுப்பணி துறை செயலர் பி.சந்திரமோகன், செய்தி துறை செயலர் ஆர்.செல்வராஜ், செய்தி, மக்கள் தொடர்பு துறை இயக்குநர் த.மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.