fbpx
Others

முதல்வர்-சிதம்பரத்தில் இளையபெருமாளுக்கு நூற்றாண்டு நினைவரங்கம்

ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டம் – தஞ்சை மாவட்டத்தில் 1940 முதல் 1970 வரையில் நடந்த மிகப்பெரிய சமூக போராட்டங்களை நடத்தியவர் பெரியவர் இளைய பெருமாள். பட்டியலின மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட இவரது போராட்டங்கள் தான் காரணம். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட இளைய பெருமாளுக்கு சுதந்திரசிதம்பரத்தில் இளையபெருமாளுக்கு நூற்றாண்டு நினைவரங்கம் முதல்-அமைச்சர் அறிவிப்பு இந்தியாவில் நடந்த முதல் பொதுத்தேர்தலில் 1952-ம் ஆண்டு கடலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கிறது; வெற்றியும் பெற்றார். அப்போது அவருக்கு வயது 27. டெல்லி சென்ற இளையபெருமாள், அம்பேத்கரை சந்திக்கிறார். ‘இவ்வளவு இளம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக ஆகி வந்திருக்கிறீர்களே? அந்த மக்களுக்காக இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார். தென்னார்க்காடு மாவட்டம், தஞ்சை மாவட்டங்களில் தான் நடத்திய மக்கள் போராட்டங்கள், தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை இவர் பட்டியல் போட்டுச் சொன்னதைக் கேட்டு, அம்பேத்கர் வியப்படைந்திருக்கிறார். இளையபெருமாளை பாராட்டி இருக்கிறார். பழங்குடியினர் 1980 முதல் 1984 வரை சென்னை எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டி தலைவராகவும் இருந்தவர் இளையபெருமாள். பட்டியலின பழங்குடி மக்களின் மேன்மைக்காக 1965-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அகில இந்திய ஆணையத்தின் தலைமை பொறுப்பும் அவர் வகித்ததுதான். மூன்றாண்டு காலம் இந்தியா முழுமைக்கும் பயணம் செய்து, சாதி கட்டமைப்பையும், தீண்டாமை கொடுமையையும் ஆய்வு செய்தார். அந்த அறிக்கையானது இந்திய சமூக அமைப்பின் சாதிய வேர்களை மறைக்காமல், துல்லியமாக வெளிப்படுத்தும் அறிக்கையாக அமைந்திருந்தது. எனவே, இந்த அறிக்கை வெளியே வருவதை தடுக்க சிலர் முயற்சித்தார்கள் அன்று அவரது அறையில் தாக்குதல் நடத்தினார்கள். அங்கிருந்து தப்பி வந்து அறிக்கையைத் தாக்கல் செய்தார் இளையபெருமாள். இப்படி நடக்கும் என்று தெரிந்து, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியனிடம் அறிக்கையின் பிரதியைக் கொடுத்து வைத்திருந்தார். அதனால்தான் அந்த அறிக்கையை அன்றையதினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிந்தது. பிற்காலத்தில் கொண்டுவரப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு அடித்தளமே இளையபெருமாள் ஆணையத்தின் அறிக்கைதான். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் கருணாநிதி 1971-ம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தார். அதற்கு எதிராக சிலர் சுப்ரீம் கோர்ட்டுக்கு போனார்கள். அப்போது தி.மு.க. அரசு தாக்கல் செய்த மனுவில், ‘சமூக சீர்திருத்தத்துக்காக அமைக்கப்பட்ட இளையபெருமாள் கமிட்டி அறிக்கை அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் செல்லும்’ என்பதற்கு ஆதாரமாக இளையபெருமாள் ஆணைய அறிக்கையையே சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியது. கருணாநிதி, இளையபெருமாள் மீது மிகப்பெரிய மரியாதையை வைத்திருந்தார். சிதம்பரத்தைச் சேர்ந்தவர் என்பதால் ‘சம்மந்தி’ என்றுதான் அழைப்பார். எனது பெரியம்மா பத்மாவின் ஊர் சிதம்பரம். 1980-ம் ஆண்டு தேர்தலில் இந்திரா காந்தி, கருணாநிதி, இளையபெருமாள் ஆகிய மூவரும் திறந்தவெளி காரில் ஊர்வலமாக சென்று வாக்கு கேட்டதை தமிழ்நாடு அறியும். 1998-ம் ஆண்டு அம்பேத்கர் பெயரிலான தமிழ்நாடு அரசின் விருதை முதன் முதலாக இளையபெருமாளுக்கு கருணாநிதி வழங்கினார். நூற்றாண்டு நினைவரங்கம் இந்திய மனித உரிமை கட்சியின் சார்பில் சமூகநீதி மாநாட்டை இளையபெருமாள் சென்னையில் நடத்தியபோது அதனை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்ற கருணாநிதியை தான் அழைத்திருந்தார்கள். ‘சலிப்பேறாத சமூக தொண்டர்’ என்று இளையபெருமாளை பாராட்டி இருக்கிறார் கருணாநிதி. இவர்கள் இருவருமே 1924-ம் ஆண்டு பிறந்தவர்கள், அதே ஜூன் மாதம் தான் அவர்கள் பிறந்திருக்கிறார்கள். கருணாநிதி பிறந்தது ஜூன் 3. இளையபெருமாள் பிறந்தது ஜூன் 26. இது மிகமிக பொருத்தமானது. அத்தகைய சமூக போராளியைப் போற்றுவதை திராவிட மாடல் அரசு தனது கடமையாக கருதுகிறது. சமூக இழிவு களையப்பட வேண்டும், சாதிய வன்முறை ஒடுக்கப்பட வேண்டும், அனைத்து சமூகங்களின் ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சட்டரீதியான அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும், சமத்துவ, சுயமரியாதைச் சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துக்காக உழைத்த இளையபெருமாள் தொண்டை சிறப்பிக்கும் வகையில் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் ஒன்று அமைக்கப்படும். ‘தீண்டாமையை ஒழிக்க சாதி அமைப்பின் ஆணிவேரை வெட்டியாக வேண்டும். அதற்கு சாதிய அமைப்பின் பிடிப்பை உடைத்தாக வேண்டும்’ என்ற இளையபெருமாள் வழியில் சுயமரியாதைச் சமதர்ம சமூகத்தை அமைப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close