fbpx
Others

முதலமைச்சர் ரங்கசாமி-புதுச்சேரி2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல்

 புதுச்சேரியில்  ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை முதல்வரும் நிதியமைச்சருமான ரங்கசாமி தாக்கல் செய்தார். புதுவை சட்டப்பேரவையில் கடந்த காலங்களில் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது.ஒன்றிய அரசு அறிவுறுத்தல்படி, இந்த நடைமுறையை மாற்றி இந்த நிதியாண்டில் முழுமையான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய ரங்கசாமி தலைமையிலான புதுவை அரசு திட்டமிட்டது.  இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் ஆளுநர் தமிழிசை தலைமையில் அண்மையில் கூடியது. இதற்கான திட்டக்குழு கூட்டத்தில் பட்ஜெட் தொகையாக ரூ. 11,600 கோடி நிர்ணயித்து ஒன்றிய அரசு ஒப்புதலுக்கு அனுப்பியது. இது கடந்த பட்ஜெட்டை விட ரூ. 1000 கோடி அதிகம். இச்சூழலில் ஒன்றிய அரசாங்கம் புதுச்சேரி பட்ஜெட்டுக்கு கடந்த 9ம் தேதி மாலை ஒப்புதல் அளித்தது.இந்நிலையில் புதுச்சேரியில் ரூ. 11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு இலவசமடிக்கணினி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் தமிழ்வளர்ச்சி, ஆராய்ச்சியை மேம்படுத்த புதுச்சேரியில் உலகத்தமிழ் ஆராய்ச்சிமாநாடு  நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் மகளிர் மேம்பாட்டிற்காக ரூ.1,330 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..

Related Articles

Back to top button
Close
Close