fbpx
Others

மின்துறை அமைச்சர் மீது கிரிமினல் வழக்கு– உச்சநீதிமன்றம்

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார் செந்தில் பாலாஜி. அப்போது அவர், அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வசூலித்து ஏமாற்றியதாக கணேஷ் குமார், தேவசகாயம் ஆகியோர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.செந்தில் பாலாஜி

அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டு எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான செந்தில் பாலாஜியின் உதவியாளர் சண்முகம் தாக்கல் செய்த மனுவில், பாதிக்கப்பட்டவர்கள் பணம் கிடைத்து விட்டதாக கூறியதையும் சமரசமாக போக விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்..அதனை ஏற்று செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதனை எதிர்த்து தர்மராஜ் என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், செந்தில்பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கை ரத்து செய்யும் தீர்ப்பு செல்லாது என அறிவித்தது.சமரசமாக செல்வது என்ற காரணத்திற்காக குற்ற வழக்குகளை விசாரிக்காமல் தவிர்க்க முடியாது என கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை தொடக்கத்தில் இருந்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். வழக்கை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் விசாரணையை தொடர வேண்டும் எனவும் நீதிபதிகள், அப்துல் நசீர், போபண்ணா, ராமசுப்பிரமணியன் அமர்வு ஆணையிட்டது.

 

Related Articles

Back to top button
Close
Close