மின்சார வாரியம்–மின்சாரம் மனித உயிரிழப்புகளை தடுக்கவேண்டும்
* வயதான தம்பதியர் தற்செயலாக அடுக்குமாடி வீட்டின் முன்புறம் உள்ள இரும்பு கேட்டை (Gate) திறக்க முற்பட்ட போது, 2) * ஒரு தொழிலாளி கடையின் ஷட்டரை (Shutter) திறக்க முற்பட்ட போது, 3) * ஒரு பெண் அவரது வீட்டில் உள்ள கொடிக் கம்பியில் துணிகளை உலர்த்த முற்பட்ட போது, 4 ) * ஒரு சிறுவன் பூங்காவில் உள்ள மின்விளக்குக் கம்பத்தை தொட்ட போது, 5 ) * அரசு ஊழியர் ஒருவர் மழைப் பெய்யும் நேரத்தில் மோட்டரை (Motor) இயக்க முற்பட்ட போது. 6 ) * மாணவர் ஒருவர் வீட்டிலுள்ள UPS பழுது பார்க்க முற்பட்ட போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதுபோன்ற விபத்துக்களை தடுக்க ஆர்.சி.டி (RCD) எனும் உயிர்காக்கும் சாதனத்தை மின்னிணைப்பில் பொருத்தியிருந்தால் மேற்கண்ட மின் விபத்துகளைத் தவிர்த்திருக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். சில ஆயிரங்கள் செலவில் ஆர்.சி.டியை (RCD) நிறுவுவதன் மூலம் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காப்பாற்றப்படும் என்று கூறியுள்ளனர். எனவே, வீடு, கடை, தொழில், பண்ணை வீடு. கல்வி நிறுவனங்கள், பொது இடங்கள் மற்றும் தற்போதுள்ள அனைத்து வகையான மின்நுகர்வோர்களும், மனித உயிர் பாதுகாப்பின் அடிப்படைத் தேவையான ஆர்.சி.டி (RCD) சாதனத்தை அவரவர் மின்னிணைப்பில் நிறுவ அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று மின்சார வாரியம் கூறியுள்ளது.