மாவட்டஆட்சிதலைவர் நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்…?
பொது மக்களை காவு வாங்க துடிக்கும் ஊராட்சி மன்ற தலைவர் காரமடை ஒன்றியம் சிக்கராம் பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக சா ஞானசேகரன் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக சிக்காரம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார் கண்ணார்பாளையம் பகுதியில் மாசடைந்த குளம் உள்ளது அதன் அருகே உள்ள மயானத்திலிருந்து உபயோகப்படுத்த முடியாத தண்ணீரை சென்னிவீரம்பாளையம்வரைகொண்டுவருகிறார்அதற்கானபணிகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.சென்னிவீரம்பாளையம்தில் ஐந்து ஆழ்துளை கிணறுகள் உள்ளதால் தண்ணீர் எங்கள் ஊர் பகுதிக்கு போதுமானதாக இருக்கின்றது எதற்காக எங்கள் பகுதிக்கு அந்த கழிவு நீரை கொண்டு வருகிறார் என்று தெரியவில்லை ஊர் பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் தன் சுயலாபத்திற்காக ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்ணார பாளையம் பகுதியில் இருந்து கொண்டு வருகிறார் சென்னிவீரம் பாளையம் பகுதியில் குழந்தைகள் சிறுவர் சிறுமியர்கள் அதிகமாக இருப்பதால் அந்தத் தண்ணீரை குடித்தாலோ அல்லது குளித்தாலோ பல்வேறு நோய்களுக்கு ஆளாகப்படுவார்கள் உயிர்பலியும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் மனு அளிக்க பொதுமக்கள் தயாராக உள்ளார்கள் அரசு செய்தியாளர் ப. முருகேசன்