Others
மாற்றுத்திறனாளிகள் மட்டுமே கலந்து கொண்டபோதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
இந்திய நாட்டின் 77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து முற்றிலும் மாற்றுத்திறனாளிகள் மட்டுமே கலந்து கொண்ட மாபெரும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று 15.08.2023 அன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி பழனிசெட்டிபட்டி சந்திரபாண்டியன் திருமண மண்டபத்தில் நிறைவுற்றது.பேரணியை மாவட்ட ஆட்சியர் சார்பில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஜெயபாரதி மற்றும் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் மருத்துவர் என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன் ஆகியோர் இணைந்து கொடியசைத்து துவக்கி வைத்தனர்.