மாநில சிலம்பப் போட்டியில் முதலிடம் சிலை பரிசு!
மாநில சிலம்பப் போட்டியில் முதலிடம் பெற்ற ஜெய்ஹிந்த் அணிக்கு மூணு அடி உயரத்தில் சிலம்பன் சிலை பரிசு!
சென்னை திருவொற்றியூரில் யுத்தவர்மா சிலம்ப போர்கலை அகாடமி சார்பில் சிலம்ப ஒற்றைக்கம்பு. இரட்டைக் கம்பு. தனித்திறமை போட்டி நடத்தப்பட்டது. இதில் மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் நானூறு மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் சென்னை ஜெய்ஹிந்த் சிலம்ப கழகம் முதலிடம் பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் துரை ஆசான் அணி இரண்டாவது இடமும். சீர்காழி வீர தமிழர் சிலம்ப கழகம் மூன்றாவது இடமும் பெற்றது. இவர்களுக்கு முறையே தங்கம். வெள்ளி. வெண்கலம் முலாம் பூசிய 11 கிலோ எடையுள்ள உலோகத்தால் ஆன சிலம்பன் சிலை மற்றும் பரிசு கேடயம்.சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டி ஏற்பாட்டை அகாடமி தலைவர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
சிலம்ப ஆசான்கள் துரை. சௌந்தர்ராஜன். ராஜா. முருகக்கனி. சண்முகராஜா மற்றும் விஜயன் அருண் கேசவன். சரவணன். பரசுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்