fbpx
Others

மாதவரம் வட்டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்திறப்பு

மாதவரம் வட்டத்தில்  வ  ட சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார் !

சென்னை. மாவட்டம் மாதவரம் வட்டம் புழல் பகுதியில் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாக வட சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்ட ஒரு வருடத்திற்கு முன்பு கட்டிடப் பணிகள் துவங்கி முடிக்கப்பட்டது.புதிய கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.  இந்த புதிய கட்டிடத்தில் சென்னை கலெக்டர். அமிர்த ஜோதி ஐ.ஏ.எஸ். வருவாய் கோட்டாட்சியர் ரங்கராஜன், மாதவரம் தாசில்தார் நித்தியானந்தம், மாதவரம் சட்ட மன்ற தொகுதி எம்எல்ஏ மாதவரம் சுதர்சனம் மாமன்ற உறுப்பினர்கள் ராஜன் பர்ணபாஸ், புழல் சேட்டு ஆகியோர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏத்தி புதிய கட்டிடத்தில் அலுவலக பணிகளை துவக்கி வைத்தனர்.  அப்போது உதவி தாசில்தார் கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close