மாதவரம் மாத்தூரில்— கலைஞர் நூற்றாண்டு விழா….
கலைஞர் நூற்றாண்டு விழா மாதவரம் மாத்தூரில் 20 இடங்களில் திமுக கொடி ஏற்றி கல்வெட்டு திறப்பு !
சென்னை மாவட்டம் மாதவரம் வடக்கு பகுதி திமுக சார்பில் 19வது வட்டச் செயலாளர் கா.தாமரைச்செல்வன் தலைமையில் 20 இடங்களில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஊர் தோறும் திமுக எனும் தலைப்பில் கொடி ஏற்றும் விழா மாதவரம் வடக்கு பகுதி செயலாளர் புழல். எம் .நாராயணன் முன்னிலையில் நடைபெற்றது.மாத்தூர். மஞ்சம்பாக்கம் .எம். எம் .டி. ஏ. சின்ன மாத்தூர் பொன்னியம்மன் நகர் உள்பட 20 இடங்களில் மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ். சுதர்சனம் எம்.எல்.ஏ. திமுக கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.மாத்தூர் இரண்டாவது பிரதான சாலை பகுதியில் அமைந்துள்ள பூங்காவில் அருகே கலைஞர் நூற்றாண்டு விழா கல்வெட்டு திறக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் 500 பொதுமக்களுக்கு அறுசுவை உணவும் முட்டையும் வழங்கப்பட்டன. அலங்கரித்து வைக்கப்பட்ட கலைஞரின் திருவுருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மலரஞ்சலி செலுத்தினார்கள்.இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மஞ்சம்பாக்கம் ஆர். பாபு .பி .நிர்மல் குமார். காசிநாதன். வி. கார்த்திகேயன் எஸ் .உதயகுமார் கோபிநாத். எம். என். அஜய் தென்னவன் பிரபு. விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.